Saturday 20 October 2012

என்னை மீண்டும் குழந்தை ஆக்கிய என் குழந்தைகளுடனான அமெரிக்கப் பயணம்.


என்னை மீண்டும் குழந்தை ஆக்கிய என் குழந்தைகளுடனான அமெரிக்கப் பயணம்.

by Buby Ravi on Friday, July 20, 2012 at 3:35am ·
 வளரத்  தொடங்கிய காலத்தில் இருந்து "அமெரிக்க ஏகாதிபத்தியம்",சிக்காகோ மேதினம், சுரண்டல், முதளித்துவம் ...வியட்னாமில் போர் ,அதன் புகைப்படங்கள், அதனால்  ஏற்ப்பட்ட ஆவேசங்கள் என்றே வளர்ந்தேன். வளர்ந்த பின்பும்  முதலில் சீன ,கியுபா இரண்டுக்கும் எப்படியாவது போய்ப் பார்த்திட்டு வரவேணும் என்றே  ஆசைப்பட்டேன். பின்னர் வளர வளர இந்தியா ,வியட்னாம், மாலைதீவு ..இப்படிப் போகவேணும் என்று நினைத்தேனே தவிர அமெரிக்க பற்றி நினைத்தது கூட இல்லை. . ஆனால் என் இரு குழந்தைகளும் அங்கு படிக்கும் சூழல் உருவானது. மகள் Genetics - Cancer இல் Phd கல்வியும், மகன் Aviation துறையும் படித்தார்கள். மகளின் முதுமாணி பட்டமளிப்புக்கு போகக் கூட நினைக்கவில்லை. ஆனால், தனது தம்பியின் பட்டமளிப்பு விழாவிற்கு வரும்படி எனது மகள் வலியுறுத்தினார். 20 வருட  Diabetes இனால் வலது கண்  Retinal detachment  பாதிப்படைந்தது. பார்வை மிகவும் குறையத் தொடங்க  இடது கண்ணிலும் பிரச்னை ஆரம்பித்தது. என் கணவருக்கு ஓய்வு இல்லை. ஆர்வமும் இல்லை. சரி, என் குழந்தைகள் வாழும் சூழலைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். தனக்குக் கிடைக்கும் புலமைப்பரிசில் பணத்தில் சமாளிக்கலாம் என்று கட்டாயப் படுத்தி விசா எடுக்க வைத்தார்கள். விசாவிற்க்கும் நம்பிக்கை இன்றியே சென்றேன். 5 வருடங்கள்  கிடைத்தது. அதன் பிறகும் குழப்பம். குழந்தைகளை கஷ்டப்படுத்த விருப்பம் இல்லாமல் இருந்தது. பலரின் உபதேசங்களால் கொழும்பில் இருந்து முதலில் பாரிஸ் சென்றேன். 
பாரிஸ் ஏர்போர்ட் சாதாரணமாகத் தான் இருந்தது. கைத்தொழில் புரட்சியில் பல மிரட்டல்களைக் காட்டிய நாடு. அட நம்ம சிங்கப்பூர் இதைவிட நல்லாய்  இருந்ததே என்று நினைத்தேன். அமெரிக்கா செல்வதற்காக Terminal-2 க்கு போகச் சொன்னார்கள். ஆட்களற்ற ஒரு பெரிய வண்டியில் நானும் டிரைவரும் மாத்திரம். பல தரிப்பிடன்களைக்  கடந்து அது போகுது போகுது ....போய்க்கொண்டே இருந்திச்சுது. Terminal-2 குள்  நுழைந்தேன் . அதன் அழகையும் ,அமைப்பையும் சொல்ல என்னிடம்  கவித்துவம் இல்லை. அதன் கூரை ஒளி புககூடியதாகவும் ,விசாலமும் ,ஒழுங்கும்  , பிரமிப்பாக இருந்தது. 7 மணிநேரம்  அங்கு தாங்க வேண்டும்.   முதலில் WiFi கிடைக்குமா என்று பார்த்தேன். credit card இல் பணம் செலுத்தும்  படி கேட்டது. சரி phone பண்ணலாம் என்றால் என்னிடம் Euro Coins இல்லை. என்னிடம் இருந்த இருபது யூரோவை மாற்ற மனம் வரவில்லை. தண்ணீர் குடிக்கப் போய்க் கேட்டேன். மூன்று யுரோ என்றார்கள். உடனே என் நாட்டு ரூபாவிற்கு மாற்றி, என் கணித மூளை செயல்பட்டு , விமானத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தாகத்திற்கு ஆறுதல் சொன்னது . ஆனால் தகவல் சொல்லவேண்டும், குழந்தைகளும், வீட்டிலும் தேடுவார்களே என்று சுத்திக் கொண்டு , கடைத்தொகுதிகளைக் கடந்து வந்த பின்னர் கண்டுகொண்டேன். 5 euro செலுத்தினால் 30 நிமிடங்கள் உபயோகிக்கலாம் என்று . நான் எடுத்துக்கொண்டது French keyboard ஒரு ஊகத்தில் ஆரம்பித்தேன். ஆனால் "@" குறியீட்டை எப்படிப் போடுவது என்று என்னால் கண்டு பிடிக்கவே முடியவில்லை. பத்து நிமிடங்கள் வீணாகிப் போனது. 
     அமெரிக்கா !  world's busiest Airport "அட்லாண்டா" வந்த போது, என்னடா நம்ம "சென்னை செண்ட்ரல்" தோத்துப் போயிடும் என்று நினைத்தேன். அவ்வளவு  கூட்டம். மகனது இடத்துக்குச் செல்வதற்கு இனொரு விமானம் ஏறவேண்டும், அதற்க்கு ஒரு மணிநேர அவகாசம் மட்டுமே இருந்தது. சோதனைச் சாவடியில் "ஏன் வந்தாய் " என்பதற்கு, மகனின் பட்டமளிப்பு என்றபோது , அந்த அமெரிக்கா குடிமகன் முகம் மலர்ந்து வாழ்த்தியது உற்சாகத்தைத் தந்தது. எனது பைகளை எடுத்துக்கொண்டு அவசரமாக அடுத்த விமானத்தில் ஏறினேன். அவளவு சிறிய விமானத்தை நான் பார்த்ததில்லை. குடிப்பதற்கு ஒரு சிறிய juice paket தவிர ,அந்த ஒரு மணித்தியால பிரயாணத்தில் எதுவும் கொடுக்கவில்லை . அதிக பணம் செலுத்தி டிக்கெட் வாங்கி இருக்கிறோம் என்பதை அவர்கள் தரும் ,குடிபானங்களும், உணவும் சிறிது நேரம் மறப்பைத் தரும். ஆனால் இங்கு அது இல்லை. 

             Little rock Airport. எனது மகன் சுமண்யன். என் அப்பாவின் பெயரின் ஒரு பகுதி. சு- மணியன் . அவர் இறந்து சரியாக ஒரு மாதத்தின் பின் பிறந்தான். பல சிக்கல்கள். உயிர் தப்பியதே அதிசயம். அவனைப் பார்ப்பதற்காகவே எனக்குக் கிடைத்த ஆசிரியர் வேலையைக் கூட நான் தொடர எண்ணவில்லை. ஆறு அடி உயரத்தில் ,என்னை வரவேற்க வந்திருந்தான். ஒவ்வொரு முறைத்  தேர்வும்  Dean's Award பெற்று இருந்தான்.  அழுதுகொண்டே அமெரிகாவிற்கு புறப்பட்ட குழந்தை, இன்று சாதித்து இருக்கிறது.. தனது பட்டப் படிப்பை விடவும் ,மேலதிகமாக ,தனது பகுதி நேர விடுதி பொறுப்பாளர் வேலையினால் கிடைத்த பணத்தில் ,விமான ஒட்டி உரிமத்தையும் பெற்று இருந்தான்.அவன் என்னை ஓடி வந்து கட்டிப் பிடித்த போது  பெருமையாக இருந்தது, மூன்று விமானம்  ஏறிய களைப்பு ஓடிப் போனது. 
 முதலில் அவன் தன்னந் தனியாக போராடி வாழ்ந்த கல்விகூடத்தையும், விடுதியையும் பார்க்க விரும்பினேன். தானும்" இதே நேரம் தான் அந்த ஊரில் வந்து இறங்கினேன்" என்று சொன்னான். ஆள் அரவம் எதுவுமற்று ,அமைதியாக இருந்தது. கொஞ்சம் குளிர். மனசு கனத்தது. ஜனக்கூட்டதையே பார்த்துப் பழகிய எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவனது விடுதி அறை, :) இது பற்றி சொல்லியே ஆகணுமா? பரீட்சைக்கு படித்து முடித்த பையனின் அறை எப்படியோ  அதைவிடவும் ,பல மடங்கு பரீட்சை கண்ட அறை போல இருந்தது. இரவு விருந்தினர் விடுதியில் தங்கினோம். அடுத்தநாள் என் மகள் சுபாரா வந்தாள். அப்பாவினதும், எனதும்,கணவரதும் முதல் எழுத்துக்காளால் உருவானது அவள் பெயர். பட்டமளிப்பு விழா முடிந்து அடுத்த நாள் , மகளின் ஊரான Pittsburgh க்கு இரு விமானங்கள் எடுக்க வேண்டி இருந்தது. UPMC என்ற எழுத்துக்கள் அந்த ஊரில் எல்லாப் பகுதிகளிலும் இருந்தது. University of Pittsburgh Medical Center அங்கு  தான்  அவள் ஆய்வுப் படிப்பை மேற்கொள்கிறாள். University க்கு மிக அருகில் அவளின் வீடு இருந்தது. மிகவும் சுத்தமாகவும் ,ஒழுங்கு முறையிலும் இருந்தது. இதனை நான் அவளிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.  Computer கல்வித்  துறையில் உலகத்தில் முதலிடம் வகிக்கும் Carnegie Mellon University பக்கத்தில் இருந்தது.  UPMC ,CMU இரண்டும் அந்த ஊரின் சிறப்பாக இருந்தது. இரு நாட்களின் பின்னர் ,இந்தியாவில் படித்த என் குழந்தைகளின் நண்பர்கள் ,ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்தனர். எனது பிறந்த தினத்தையும் சிறப்பாக கொண்டாடினர். 
may 26 அதிகாலை Pittsburgh இல் இருந்து வாசிங்க்டன் போனோம்.அமெரிகாவின் தலை நகரம் .வெள்ளை மாளிகை ,பல நாட்டு தூதுவராலயமும் அங்குதான் இருக்கிறது.அடுத்தநாள் ஆபிரகாம் லிங்கனுடைய நினைவு தின விடுமுறை .கூட்டம் அலை மோதியது. தொலைக்காட்சிகளில் பார்த்த WWE ஹீரோக்கள் இளவயசு பெண்களை மோட்டார் வண்டிகளில் ஏற்றியபடி உலா வந்தார்கள். உலகப் போரின் நினைவு தூபிகள்,என்று பல இருந்தன. அதிலும் வியட்நாமில் உயிர் நீத்தவர்களுகும் இருந்தது. என்னால் நடக்கவும் முடியாது, ஆர்வமும் இருக்கவில்லை. அதனால் காரில் . இருந்தபடியே பார்த்தோம். அடுத்தநாள் நியூயார்க் ! பலவின மக்களை ஒரே இடத்தில் பார்க்கும் இடம். அதி பரபரப்பான , ஒளி அலங்காரங்கள் சூழ்ந்த இடம். சங்கர் ,கெளதம் மேனன் படங்களில் பார்த்ததை நேரில் பார்த்தேன். 1,454 அடி உயரத்தில் 120 மாடிகளிக் கொண்ட Empire Stat e Building. English movie  " Sleepless in Sea.ttle" ,சங்கரின் "ஜீன்ஸிலும்" பார்த்த   கட்டிடத்தை  அண்ணார்ந்து பார்த்தேன்
.பக்கத்தில் வெள்ளை நிறத்தவர்கள் ரிக்க்ஷா வண்டியை ஓட்டித்திரிந்தார்கள். அவர்களை நாம் ஏற்றியதைத் தான் பார்த்திருக்கிறேன். அநேகமான ஹிந்தி படங்களில் பார்த்த Brooklyin Bridge , செப்டெம்பர் 11 World Trade  Cen ter எல்லாம்  அருகருகே  இருந்தது .  Statue of Liberty , கடலுக்குள் பாதை , நீண்ட சாலைகள், ஓய்வெடுக்காத  மின் விளக்குகள் என்று நியோர்க் நகரம் ஓய்வின்றி  முழித்துக் கிடந்தது. காற்பந்தாட்டம்  தான் அவர்களது உயிர். அதற்கான மைதானங்கள் அதிகமாக இருந்தன. 


இரவு ,எங்களை மிகவும் நேசித்து வளர்த்த ஆன்டி இறந்ததாக தகவல் கிடைத்தது. தொடர்ந்தும் அங்கு நிற்பதற்கு மனசு ஒத்துழைக்கவில்லை. அதிகாலையில் திரும்பவும் ,மகளின் இடத்திற்கு திரும்பினோம். எனிடம் கனடா விசா இருக்கவில்லை. சுபா மாத்திரம் கனடா சென்றார். 
நாட்கள் பறந்தன. இடையில் பல சுகவீனங்கள் வந்து போயின. மாவோ சொன்ன " செப்பு சல்லியையும் சேமியுங்கள் " என்பதை என் குழந்தைகளிடம் கற்றுக்கொண்டேன்.  எனது மச்சான் இலண்டனில் இருந்து வந்து பார்த்தான். எனது நண்பர்கள் பலரும் பேசினார்கள். எனது நபி ஒருவர் கனடாவில் இருந்து வந்தார். எனது குழந்தைகளின் தமிழ் தெரியாத நண்பர்களுக்கு நானும் தாய் ஆனேன். அதில் ஒரு சிங்கள நண்பியும் இருந்தார். இன, மொழி, நிறம்  மறந்து அவர்களின் நெருக்கம் புதிய பல கதைகள் சொன்னது. பிரிவினை தூவும் பெரிய மனிதர்கள் அங்கு இருக்கவில்லை. சமூக அக்கறையுடனும், பொறுப்புடனும் அந்த PhD படிக்கும்  குழந்தைக l இருந்தது  சந்தோசமாக  இருந்தது.கல்வியில் மட்டுமல்லாது  ,தொழில் நுட்பத்திலும்  உலக அரசியல் ,நாட்டு நடப்புகள் எல்லாம் அறிந்து இருந்தார்கள்.பெண்களும்,ஆண்களும் சமையல் செய்தார்கள். 
ஊர் திரும்புவதற்கான இறுதி நாட்களில், எனது மகளின் ஆய்வு கூடம் மீண்டும் சென்றோம். அவர் கான்சர் செல்லுகள்  வளரும் வேகத்தை ஒப்பிட்டுக் காட்டினார். என் விரல் பிடித்து நடந்த குழந்தை எதோ ,எதோ எல்லாம் சொல்லியது, காட்டியது. 
Football.
 23 வருடங்களின் பின்னர் சைக்கிள் ஓட்டினேன். அவளின் சைக்கிளுக்கு "SUBARU" என்று பெயர் வைத்தோம்.நாயகரவின் மறு முனையான Lake Er i e ,உலகத்தில் நான்காவது நீளமான ஆறு அது. The Cathedral of Learnin g"  மிக உயரமான கல்வித் தொகுதி . நூற்றாண்டுகளான சர்சுகள்,இப்படி நிறைய பிரமிப்புகள் இருந்தாலும், என் நாட்டின் இயற்கையும், பேரழிவுகளின் பின்னரும், என் நாடு என்று சொல்லி வாழும் ,என் சனத்தையும் எதோடு ஒப்பிட? கடலில் கூட மூழ்காத என் தேசம், அரசியல் வாதிகளின் வாய்க்குள் கிடந்தது அல்லாடுகிறதே. இன்றும் அது அமைதி கொள்ளக் கூடாது  என்பதில் வெளிவிட வாழ்வாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். என் குழந்தைகளிடம் கேட்டதெல்லாம், உங்கள் அறிவு இந்த சமூகத்துக்கு ஆனதாக  இருக்கவேண்டும் என்றே! 
ஊர் திரும்பும் அன்று ,23, 22 வயசுக் குழந்தைகள் 2, 3 வயசுக் குழந்தைகள் ஆகி தேம்பி அழுதது , இன்றுவரை ஆறவில்லை. மீண்டும் நீண்ட பிரயாணம். Pittsburgh ,Detroit,( Michigan இனுடைய பெரிய நகரம் ) Amsterdam( Netherlands இன்  தலைநகரம் ) பின்னர் Doha . நம்ம நாடு வந்து சேர்ந்தேன்! 
குறிப்பு :-
எனது சகோதரனும், தோழனுமான ஒரு உறவு என்னிடம் கேட்டார், " என்ன அக்கா  அமெரிக்க எப்படி இருக்கிறது? உங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் படிப்பது பற்றி உங்கள் தோழர்கள் என்ன சொல்கிறார்கள் ? " என்று சுவை ததும்பக் கேட்டார். இது பற்றி ஒரு கவிதை கூட பத்திரிகையில் வந்தது. அதற்க்கு என் மகன் சொன்னான் " விமானத்தைக் கண்டு பிடித்த ஊரில் ,அது பற்றி படிப்பது வியப்பில்லை. எம்மை அடிமைப் ப்படுத்தி ஆண்ட , நாட்டின் சட்டத்தைப் படித்தால் தான் தப்பு என்று" பிள்ளைகள் தெளிவாக இருக்கிறார்கள்.சுப்பிரமணித்தாரின் வீரத்துடன், சத்தியமும்  மணக்கும்        " சத்தியமனை" இந்த தேசத்தின் மக்களுக்கானது. அந்த உணர்வுடன் அவர்களை வளர்த்திருக்கிறேன் என்று நம்புகிறேன். 
Like ·  ·  · Share · Delete